மன்னார் பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான பாதீட்டினை தயாரிப்பதன் நோக்கில் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வட்டாரங்களிலும் கூட்டங்கள் நடாத்தப்பட்டு தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டன.
இக்கூட்டத்தில் கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கற்பிணித்தாய்மார்களுக்கான சத்துணவுப்பொதி வழங்கும் நிகழ்வானது 06.08.2024 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் செயலாளரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், நிதி உதவியாளர் மற்றும் அலுவலகம்சார் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மன்னார் பிரதேச சபை மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகம் இணைந்து நடாத்தும் 2023 உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு தொடர்பான பதிவுகள்
