டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் 2023 –

டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்
2023 – மன்னார் பிரதேசசபை.
எமது சபையினால் பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கென செயற்படுத்தி வரும் நிகழ்ச்சித்திட்டங்களில் சுகாதார நலன் பேணல் தொடர்பான விடயமாக டெங்கு ஒழிப்பு அமைகின்றது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் தொடக்கம் பல நிகழ்வுகளும் சபையால் நடாத்தப்பட்டது. முதலில் செயலாளரின் அனுசரணையுடன் புதுக்குடியிருப்பு, எருக்கலம்பிட்டி, தலைமன்னார், உயிலங்குளம்,பெரியகரிசல் சின்னக்கரிசல் பகுதிகளில் சிரமதான நடவடிக்கைகள் இடம்பெற்றது.இந்நிகழ்வானது ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தலா 40 பேரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. தொடர்ந்து எமது உப அலுவலகப்பகுதிகள் அவற்றின் கீழுள்ள வட்டாரங்களில் சிரமதானம் மற்றும் குப்பை அகற்றல் நிகழ்வுகள் இடம்பெற்றது. இது பெப்ரவரி தொடக்கம் மே மாதமளவில் செயற்படுத்தப்பட்டது. டெங்கு ஒழிப்பின் விழிப்புணர்வை உணர்த்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள்,பொது அறிவிப்புகள் மன்னார் பிரதேசசபை பரப்புகளான உயிலங்குளம் முதல் தலைமன்னார் வரை நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களும் எமது சபை பொறுப்பதிகாரிகள், வருமான உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை கொண்டும் நிறைவேற்றப்பட்டு டெங்கு நோயானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதையிட்டு எமது சபை திருப்தியடைந்துள்ளது.தொடர்ந்தும் இது போன்ற நிகழ்வுகள் பொதுமக்களின் நலன் கருதி நாம் நிறைவேற்ற தயாராக உள்ளோம்.

பால்நிலை பொறுப்பு கூறல் தொடர்பான பயிற்சி பட்டறை

OFFER நிறுவனத்தின் அனுசரனையுடன் மடு பிரதேச செயலக மகளீர் அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் வளவாளர்களாகவும் பிரதேசசபை அலுவலர்கள் மற்றும்
சனசமூகநிலைய உறுப்பினர்கள் பயனாளிகளாகவும் கலந்து கொண்ட பால்நிலை
பொறுப்பு கூறல் தொடர்பான பயிற்சி பட்டறை 24.05.2023 ஆம் திகதி எமது
பிரதேசசபை கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்த…

See more

முன்பள்ளி மாணவர்களுக்கான துணைபோசாக்கு உணவு வழங்கல் திட்டம்

உள்ளூராட்சி மன்றங்களினால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டு
நிதித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான
துணைபோசாக்கு உணவு வழங்கல் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் கடந்த 02.05.2023 ஆம் திகதி தொடக்கம் 11.08.2023 ஆம் திகதி
வரையான காலப்பகுதியில் 60 பாடசாலை நாட்களுக்கு துணைபோசாக்கு உணவு வழங்கப்பட்து.
இதன் மூலம் மன்னார் பிரதேசசபையின் கீழுள்ள 40 முன்பள்ளிகளுக்குட்பட்ட 1174
மாணவர்கள் பயனடைந்தனர். இத்திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்குமுகமாக
தாராபுரம் முன்பள்ளியில் எமது சபையின் செயலாளர்ரூபவ் சனசமூக அபிவிருத்தி
உத்தியோகத்தர்ரூபவ் குடும்பநல உத்தியோகத்தர்ரூபவ் பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும்
பெற்றோர்கள் கலந்து கொண்டு தேசியகொடி ஏற்றி ஆரம்பித்து வைத்தனர்.
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு 12 சனசமூகநிலையங்கள் தமது பூரண ஒத்துழைப்பினை
வழங்கிநின்றன. திட்டத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் மாணவர்களின் உடல் எடை
திணிவுச்சுட்டி அளவிடப்பட்டதன் மூலம் இத்திட்டத்தின் ஊடாக மாணவர்கள் பயனடைந்துள்ளமை
அவதானிக்கப்பட்டது. மாணவர்களின் உடல் எடை திணிவுச்சுட்டி அதிகரித்ததன் அடிப்படையில்
பெற்றோர்கள் தமது மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.

2024ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்க வேண்டிய வருமானம் மற்றும்அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை பெற்றுக் கொள்வதன்பொருட்டு கிராம மட்ட அமைப்புக்களிடமிருந்து ஆலோசனைகளை பெறுவதற்கானகலந்துரையாடல்

2024ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்க வேண்டிய வருமானம் மற்றும்அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை பெற்றுக் கொள்வதன்பொருட்டு கிராம மட்ட அமைப்புக்களிடமிருந்து ஆலோசனைகளை பெறுவதற்கானகலந்துரையாடல்
வட்டாரம் – தலைமன்னார்
இடம் :- சென் லோரன்ஸ் ஆலய மண்டபம்
காலம் :- 30.10.2023 (திங்கள் கிழமை)
நேரம் :- காலை 10.00 மணி
வட்டாரம் – தலைமன்னார் கிழக்கு
இடம் :- கிராமிய அபிவிருத்தி சங்கம் (தலைமன்னார் பியர்)
காலம் :- 30.10.2023 (திங்கள் கிழமை)
நேரம் :- காலை 11.30 மணி