2025ஆம் ஆண்டுக்கு தேவையான ஒப்பந்த அடிப்படையிலான சுத்திகரிப்பு, மின்னியலாளர் சேவை
மன்னார் பிரதேசசபைக்கு பின்வரும் வழங்கல் சேவைகளுக்கான பெறுகைகள் 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் 2025 மார்கழி 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு கோரப்படுகின்றன.
1. சேவையின் விபரமும் வைப்புத் தொகைகளும்
சுத்திகரிப்புச் சேவை
சேவை இல |
விபரம் |
தேவைப்படும் ஆளணியின் எண்ணிக்கை |
மீளளிக்கப்படாத வைப்புத்தொகை (ரூபா) |
மீளளிக்கப்படும் வைப்புத்தொகை (ரூபா) |
01 | சுத்திகரிப்புச் சேவை வழங்கல் (திண்மக் கழிவகற்றல்) | 2,000.00 | 20,000.00 | |
பணியாளர்கள்
(ஆண்கள் 03) |
03 |
|||
காரியாலய காரிய சகாயர் (பெண் – 01) |
01 |
ஒப்பந்த அடிப்படையிலான மின்னியலாளர்
சேவை இல |
விபரம் |
தேவைப்படும் ஆளணியின் எண்ணிக்கை |
மீளளிக்கப்படாத வைப்புத்தொகை (ரூபா) |
மீளளிக்கப்படும் வைப்புத்தொகை (ரூபா)
|
01 | மின்னியலாளர்
(மன்னார் பிரதேசசபை எல்லைப் பரப்பு)
|
01 | 2,000.00 | 20,000.00 |
2. வைப்புக்கள்
பெறுகைக்கான வைப்புத்தொகைகளை (மீளளிக்கப்படாத, மீளளிக்கப்படும்) பிரதேசசபையின், வருமான பிரிவில், சமர்ப்பித்து பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். தெரிவு செய்யப்படாத பெறுகை மனுதாரர்களுக்கு பெறுகைகளுக்கான ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்டு கைச்சாத்திடப்பட்டதும், மீளளிக்கப்படக்கூடிய வைப்புப்பணம் மீளளிக்கப்படும்.
3. வியாபாரப்பதிவுச் சான்றிதழ்
பெறுகைப்பத்திரம் கோரும் நிறுவனங்கள் குறித்த சேவைக்கான பதிவினை உறுதிப்படுத்தும் பொருட்டு வியாபாரப்பதிவு சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும். அத்துடன் வடமாகாணத்தில் நிரந்தரப் பதிவினைக் கொண்டிருத்தல் அல்லது தமது கிளை அலுவலகத்தினையாவது கொண்டிருத்தல் வேண்டும்.
4. அனுபவச்சான்றிதழ்
கடந்தகால, நிகழ்கால அனுபவச்சான்றிதழ்களையும் பெறுகை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
கூலி வீதம் தொழிற் திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கூலி வீதங்களிற்கு ஏற்புடையதாக இருத்தல் வேண்டும்.
5. பெறுகைப்படிவங்கள் / ஆவணங்கள்
பெறுகை ஆவணங்கள் 12.11.2024 ஆம் திகதி தொடக்கம் 25.11.2024 ஆம் திகதி பி.ப 10.00 மணி வரையும் மன்னார் பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தில்; வழங்கப்படும். பெறுகைப் படிவங்கள் அனைத்தும் இரு பிரதிகளில் மூலப்பிரதி,இணைப்பிரதி எனக் குறிப்பிட்டு அனுப்பப்படல் வேண்டும்.
6. பெறுகைகள் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முறை
ஒவ்வொரு சேவைக்கும் வெவ்வேறாக விண்ணப்பிக்கவேண்டும் என்பதுடன் சகல முத்திரையிடப்பட்ட பெறுகைகளும் “செயலாளர்; பெறுகைகள் குழு, மன்னார் பிரதேசசபை ”. என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும். கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் சேவை விபரம் குறிப்பிடல் வேண்டும். நேரடியாக வழங்கினால் பெற்றுக் கொண்டதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும். பெறுகைகள் வைப்புத் தொகையை செலுத்தியதற்கான பற்றுச்சீட்டின் பிரதியை பெறுகைப் பத்திரத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும.
7. சித்தியடையும் கேள்விதாரர் தங்களது கேள்வித்தொகையின் 5% இனை பாதுகாப்பு வைப்பாக 02.12.2024 ம் திகதிக்கு முன் செலுத்தி குறித்த சேவையின் பேரில் ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் வேண்டும்.
8. இறுதித்திகதி
சகல முத்திரை இடப்பட்ட பெறுகைகளும் 27.11.2024ம் திகதி பி.ப 10.30 மணிவரை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
9. பெறுகைகள் திறத்தல்
பெறுகை நேரம் முடிவடைந்தவுடன் பெறுகைப்பத்திரங்கள் 27.11.2024ம் திகதி பி.ப 10.30 மணிக்கு திறக்கப்படும். விண்ணப்பதாரரோ அல்லது எழுத்து மூலம் நியமிக்கப்பட்ட பிரதிநிதியோ பெறுகைகள் திறக்கும் போது சமூகமளிக்கலாம். பெறுகை நிபந்தனைகளுக்கு அமைவாக அனுப்பப்படாத ஆவணங்களும் பூரணமாக நிரப்பப்படாத நடைமுறை விலைகளுடன் ஒவ்வாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். மேற்படி பெறுகை கோரல்களை இரத்து செய்யவோ, நிறுத்தி வைக்கவோ, பகுதியாக வழங்குவதற்கோ, புதிதாகக் கோருவதற்கோ பெறுகைகள் குழுவுக்கு பூரண அதிகாரமுண்டு.
• பெறுகை தொடர்பான பெறுகைக் குழுவின் தீர்மானமே இறுதித் தீர்மானமாகும். மேலதிக விபரங்களை 0232050002 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.