சுற்றுச்சூழல் முகாமைத்துவம் மற்றும் சுய பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறை – 2024

மன்னார் பிரதேச சபையில் சுற்றுச்சூழல் முகாமைத்துவம் மற்றும் சுய பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறையானது 13.12.2024 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிப்பட்டறையில்  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பொறுப்பதிகாரி அன்ரறியா அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு சுற்றுச்சூழல் முகாமைத்துவம்  தொடர்பான விளக்கங்களையும்,  பொது சுகாதார பரிசோதகர் பர்சின் அவர்கள் சுய பாதுகாப்பு தொடர்பான விளக்கங்களையும் வழங்கினார்கள். இப்பயிற்சிநெறியில் செயலாளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், அலுவலகம் சார் உத்தியோகத்தர்கள், உப அலுவலக பொறுப்பதிகாரிகள், சாரதிகள் மற்றும் சுகாதார தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் பெங்கல் புயல் அனர்த்த காலத்தில் களப்பணியாற்றிய ஊழியர்களுக்கான மெச்சுரையும் வழங்கப்பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *