மன்னார் பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான பாதீட்டினை தயாரிப்பதன் நோக்கில் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வட்டாரங்களிலும் கூட்டங்கள் நடாத்தப்பட்டு தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டன.
இக்கூட்டத்தில் கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.