மன்னார் பிரதேச சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப்பட்டறையானது 09.12.2024 ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிப்பட்டறையில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், மற்றும் சட்டங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கினார். இப்பயிற்சிநெறியில் செயலாளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் மற்றும் அலுவலகம் சார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.