மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கற்பிணித்தாய்மார்களுக்கான சத்துணவுப்பொதி வழங்கும் நிகழ்வானது 06.08.2024 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் செயலாளரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், நிதி உதவியாளர் மற்றும் அலுவலகம்சார் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.