ஆதன வரி அறவீடு தொடர்பான விபரங்கள்


ஆதனவரி

வீடுகள், கட்டிடங்கள், நிலம், குடியிருப்புகள் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட அரச சொத்துக்கள் உட்பட  உள்ளூராட்சி அதிகார வரம்பிற்குள் உள்ள அனைத்து அசையாச் சொத்துக்களும் ஆதன வரிக்கு உட்பட்டவை. ஆதனத்தின் வருடாந்த பெறுமதியின் அடிப்படையில்  நிர்ணயிக்கும் சதவீதத்தின் அடிப்படையில் வரி கணக்கிடப்படுகிறது. அனைத்து அசையாச் சொத்துக்களும் முன்கூட்டிய சபையின் ஆதனப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். 


சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:


உள்ளூராட்சி மன்றத்தினால் வெளியிடப்பட்ட ஆதன வரி அறிவிப்பு ( Kபடிவம்)


செலுத்த வேண்டிய தொகை


சொத்தின் உரிமையாளர் அல்லது உரிமையாளருக்கு வழங்கப்பட்ட மதிப்பீட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட தொகை செலுத்தப்படும்.


சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள்  


விடய உத்தியோகத்தர்  

வருமான பரிசோதகர்

எமது பிரதேச சபையின் பேசாலை உப அலுவலகம்  மற்றும் எருக்கலம்பிட்டி உப அலுவலகம் ஆகிய பிரதேசங்களில் 1989ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆதனவரி மதிப்பீட்டின் பிரகாரம் சோலை வரி அறவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனினும் இவ் பிரதேசங்களில் மீள்மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்தாகும்